என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை முடியும் வரை... கம்பீருக்கு அட்வைஸ் வழங்கிய ரகானே
- இப்போது அவர் இந்திய அணிக்கு பயிற்சியளித்து வருகிறார். இது ஒரு மிகவும் பொறுப்பான பணி.
- அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்து, அணியில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான ரகானே அறிவுரை வழங்கியுள்ளார்.
கம்பீருக்கு ரகானே வழங்கிய அட்வைஸில் கூறியிருப்பதாவது:-
கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட்டை மிகச் சிறப்பாக விளையாடினார். இப்போது அவர் இந்திய அணிக்கு பயிற்சியளித்து வருகிறார். இது ஒரு மிகவும் பொறுப்பான பணி. அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்து, அணியில் கவனம் செலுத்த வேண்டும்.
இது எனது தனிப்பட்ட கருத்து. நாம் முக்கிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். உலகக் கோப்பை முடியும் வரை சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள்.
இவ்வாறு ரகேனே அட்வைஸ் வழங்கியுள்ளார்.
Next Story






