என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் இவைதான்
- விஜய் ஹசாரே டிராபியின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
- காலிறுதிச் சுற்றுகள் பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளன.
புதுடெல்லி:
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் 'எலைட்' பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று நடந்து முடிந்தன.
அகமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தமிழக அணி கேரளாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்–றது. தொடர்ந்து 4 தோல்வி கண்டு காலிறுதி வாய்ப்பை இழந்து விட்டது தமிழக அணி.
இந்நிலையில், லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதிச் சுற்று பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
Next Story






