என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை 2026: ஃபார்ம் அவுட் வீரர்களை பற்றி யோசிக்க வேண்டாம் - இந்திய பயிற்சியாளர் அதிரடி
    X

    டி20 உலகக் கோப்பை 2026: ஃபார்ம் அவுட் வீரர்களை பற்றி யோசிக்க வேண்டாம் - இந்திய பயிற்சியாளர் அதிரடி

    • இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • அது அவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்று சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் சரியான ஃபார்மில் இல்லாதது அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நாளைய போட்டி இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஃபார்ம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய சிதான்ஷூ, "ஒரே ஒரு போட்டியில் தான் தோற்றோம், அது அவர்களுக்கு நல்ல ஆட்டமாக இருந்தது, நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. கடந்த போட்டியில் அபிஷேக் நன்றாக இருந்தார்; ஒரு நபரைப் பற்றி அதிகமாக யோசிப்பது அர்த்தமற்றது. அது அவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை நல்ல மனநிலையில் வைத்திருப்பது எங்கள் வேலை.

    அவர் 30 பந்துகளில் 80, 70, 90 ரன்களையும் 40, 50 பந்துகளில் 100 ரன்களை எடுத்தபோது, யாரும் அவரது ஆட்டத்தைப் பற்றி விவாதிக்கவில்லை. அவர் மீண்டும் பந்தை அடிக்கத் தொடங்கியதும், நீங்கள் மீண்டும் அதே அபிஷேக்கை பார்ப்பீர்கள். எந்த சந்தேகமும் இல்லை. இப்போது, இந்த ஆட்டத்தில், அடுத்த போட்டியில் அவர் அதை செய்வார் என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பதில் இருந்து வெகு தொலைவில் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என தெரிவித்தார்.

    Next Story
    ×