என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு
    X

    முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு

    • ஆர்சிபி தரப்பில் விராட் கோலி 43 ரன்கள் விளாசினார்.
    • பஞ்சாப் அணி தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சால்ட் அதிரடியாக விளையாடி 9 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24, பட்டிதார் 26 என ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த விராட், அதிரடியாக விளையாட ஆரமித்தார். ஆனால் அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய ஜித்தேஷ் 10 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Next Story
    ×