என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்கமாட்டோம், உருவாக்குவோம்: ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர்
- புதிய வீரர்கள் வரும்போதெல்லாம் அவர்கள் ஸ்டார் கிடையாது. அவர்கள் ஸ்டாராக உருவாகுகிறார்கள்.
- கடந்த வருடம், எங்களிடம் இருந்த வீரர்கள் அணியில் நுழைந்தபோது ஸ்டார்களாக இல்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெகா ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்களை ஏலம் எடுத்தது. இதில் 14 வயதான வைபவ் சூர்வன்ஷியும் ஒருவர். இவர் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 11 போட்டிகளில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லர், டிரென்ட் போல்ட் போன்ற சூப்பர் ஸ்டார்களை மெகா ஏலத்தில் எடுக்காததுதான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்க மாட்டோம். இளம் வீரர்களிடம் இருந்து சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் கோச் திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திஷாந்த் யாக்னிக் கூறியதாவது:-
ஸ்டார் (வீரர்கள்) பற்றி நீங்கள் கேட்டது சிறப்பான கேள்வி. புதிய வீரர்கள் வரும்போதெல்லாம் அவர்கள் ஸ்டார் கிடையாது. அவர்கள் ஸ்டாராக உருவாகுகிறார்கள்.
கடந்த வருடம், எங்களிடம் இருந்த வீரர்கள் அணியில் நுழைந்தபோது ஸ்டார்களாக இல்லை. ஆனால் அவர்கள் ஸ்டார்களாக மாறினர். இப்போது நாங்கள் அணியில் சேர்த்த வீரர்களை, நாங்கள் ஸ்டார்களாக மாற்றுவோம். நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்கமாட்டோம். சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவோம். இதுதான எங்களுடைய வாசகம்.
வைபவ் சூர்யவன்ஷியை பார்க்கும்போது, குஜராத் அணிக்கெதிராக அவரை பேட்டிங்கை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நேரம் வரும்போது, எங்கள் வீரர்கள் ஸ்டாராக மாறுவார்கள். நாங்கள் இதை நம்புகிறோம்.
இவ்வாறு திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.






