என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் தொடரில் அதிக ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவுசெய்த ஐதராபாத் அணி
- ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று 15-வது லீக் போட்டி நடைபெற்றது.
- இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று 15-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
ஐ.பி.எல். வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன் அந்த அணி கடந்த ஆண்டு சென்னைக்கு எதிராக 78 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்ததே இந்த வகையில் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.
ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று 29-வது முறையாக மோதிய கொல்கத்தா அணி 20-வது வெற்றியை பெற்றது.
இதேபோல் பஞ்சாப்புக்கு எதிராக 21 ஆட்டத்திலும், பெங்களூருவுக்கு எதிராக 20 ஆட்டத்திலும் கொல்கத்தா அணி ஏற்கனவே வென்றுள்ளது.
இதன்மூலம் மூன்று அணிகளுக்கு எதிராக 20 மற்றும் அதற்கு அதிகமான ஆட்டங்களில் வென்ற முதல் அணி என்ற பெருமையை கொல்கத்தா பெற்றது.






