என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    எங்களை ஆதரியுங்கள்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அர்ஷ்தீப் சிங்
    X

    எங்களை ஆதரியுங்கள்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அர்ஷ்தீப் சிங்

    • பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அதிக ஆதரவு கிடைக்கவில்லை.
    • பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அந்த அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை என்று ஒரு ரசிகரின் ஸ்னாப்சாட் செய்திக்கு அர்ஷ்தீப் பதிலளித்துள்ளார். மேலும் அனைவரும் தங்களை ஆதரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களை ஆதரித்ததற்கு நன்றி. நீங்கள் பஞ்சாபி இல்லை. ஆனால் நீங்கள் இன்னும் பஞ்சாபை ஆதரிக்கிறீர்கள். அதே நேரத்தில் பஞ்சாபை ஆதரிக்காத மற்றும் பல்வேறு விருப்பமான அணிகளைக் கொண்ட பல பஞ்சாப் மக்கள் உள்ளனர்.

    பஞ்சாப், அவர்களின் மாநிலம், அவர்களின் அணியை ஆதரிக்கவும், நாங்கள் வெற்றி பெறுவதைக் காண அதிக எண்ணிக்கையில் வரவும் நான் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று அர்ஷ்தீப் கூறினார்.

    Next Story
    ×