என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ் - 2வது டெஸ்டில் விளையாடுவாரா?
- முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
- சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்மன் கில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.






