என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
எதிர்கால இந்திய அணியின் கேப்டன் யார்? இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விளக்கம்
Byமாலை மலர்31 May 2022 8:35 AM GMT (Updated: 31 May 2022 8:35 AM GMT)
டோனியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் செயல்படுவதாக டெலிவிஷன் வர்ணனையாளரும், முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் புகழாரம் சூட்டி இருந்தார்.
புதுடெல்லி:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
புதுமுக அணியான குஜராத் தனது அறிமுக போட்டியிலேயே ஐ.பி.எல். கோப்பையை வென்று முத்திரை பதித்தது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவி முக்கிய பங்கு வகித்தது.
டேவிட் மில்லர், ரஷீத்கான், சுப்மன்கில், ராகுல்திவேதியா, விர்த்திமான் சஹா போன்ற வீரர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.
இறுதிப்போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தியதோடு பேட்டிங்கில் 34 ரன்கள் எடுத்தார். அவரது கேப்டன் பதவியை முன்னாள் வீரர்கள் வீரேந்திர ஷேவாக், ரவிசாஸ்திரி ஏற்கனவே பாராட்டி இருந்தனர்.
டோனியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் செயல்படுவதாக டெலிவிஷன் வர்ணனையாளரும், முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் புகழாரம் சூட்டி இருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும், ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் திறமையை பாராட்டி உள்ளார்.
புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் ஐ.பி.எல். போட்டியில் மகத்தான சாதனையை படைத்தது. எதிர்கால இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட சாத்தியம் இருக்கிறது. அவர் குஜராத் அணியை வழி நடத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல குஜராத் அணியின் ஆலோசகரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரருமான கேரி கிரிஸ்டனும் கேப்டன் பதவியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டி உள்ளார்.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ரோகித்சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக பணியாற்றி வருகிறார். 3 வடிவிலான போட்டிகளுக்கும் அவர் கேப்டனாக இருக்கிறார்.
அவருக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கணித்து உள்ளனர்.
28 வயதான ஹர்திக் பாண்ட்யா இந்த ஐ.பி.எல். போட்டியில்487 ரன்கள் எடுத்தார். 8 விக்கெட் வீழ்த்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X