என் மலர்
விளையாட்டு

சஞ்சு சாம்சன் - ரவி சாஸ்திரி
சஞ்சு சாம்சனால் உலகின் எந்த மைதானத்திலும் சிக்சர் விளாச முடியும்- ரவி சாஸ்திரி புகழாரம்
உலகத்தில் உள்ள எந்த மைதானமாக இருந்தாலும் சஞ்சு சாம்சனால் சிக்சர் விளாச முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 5 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். இதில் இந்நிலையில் சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.
சஞ்சு சாம்சன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம்சனின் ஆட்டம் அருமையாக இருந்தது. உலகத்தில் உள்ள எந்த மைதானமாக இருந்தாலும் அவரால் சிக்சர் அடிக்க முடியும். மேலும் அவரது ஷாட் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது.
சாம்சன் கூடுதலாக 5 ஓவர் களத்தில் இருந்திருந்தால் ராஜஸ்தான் அணி 230 ரன்கள் வரைக்கு எடுத்திருக்க முடியும். சாம்சன் - படிக்கல் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தது. பட்லர், ஹெட்மையர் ஆகியோரின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.
ராஜஸ்தான் அணி ஏப்ரல் 2-ந் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது.
இதையும் படியுங்கள்...வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்- ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் புகழாரம்
Next Story






