என் மலர்
விளையாட்டு

கோப்புப்படம்
ஐ.பி.எல். 2022: ஐதராபாத் பந்து வீச்சு- ராஜஸ்தான் அணியில் ஏழு வீரர்கள் அறிமுகம்
புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேயில் நடைபெற்ற இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆடுகளத்தில் புற்கள் குறைவாக உள்ளது. பனி முக்கிய பங்கு வகிக்கும். அதை நாங்கள் பயன்படுத்த முயற்சி செய்வோம் என கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
எங்கள் அணிக்கு இன்று சிறப்பான நாள். ஏழு வீரர்கள் அறிமுகமாகிறார்கள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
ராஜஸதான் ராயல்ஸ் அணி:
1. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2. ஜோஸ் பட்லர், 3. தேவ்தத் படிக்கல், 4. சஞ்சு சாம்சன், 5. ஷிம்ரன் ஹெட்மையர், 6. ரியான் பராக், 7. அஸ்வின், 8. நாதன் கவுல்டர் நைல், 9. சாஹல், 10. டிரென்ட் பவுல்ட், 11. பிரசித் கிருஷ்ணா.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
1. அபிஷேக் ஷர்மா, 2. ராகுல் திரிபாதி, 3. கேன் வில்லியம்சன், 4. நிக்கோலஸ் பூரன், 5. எய்டன் மார்கிராம், 6. அப்துல் சமாத், 7. வாஷிங்டன் சுந்தர், 8. ஷெபெர்ட், 9. புவி, 10. டி. நடராஜன், 11. உம்ரான் மாலிக்.
Next Story






