search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சுரேஷ் ரெய்னா, ரவி சாஸ்திரி
    X
    சுரேஷ் ரெய்னா, ரவி சாஸ்திரி

    வர்ணனையாளராக களம் இறங்கும் ரெய்னா, ரவி சாஸ்திரி

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் முறையாக ஏலம் போகாத சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு இவரது ஆட்டமும் முக்கிய காரணமாக இருந்தது.

    2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சில வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறினர். அதற்கு மாற்று வீரராகக்கூட ரெய்னாவை தேர்வு செய்யவில்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் சிறந்த வர்ணனையாளரும் கூட. 2017-ம் ஆண்டுக்குப்பின் வர்ணனை செய்யாமல் உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி பின்னர், சில அணிகள் அவரை பயிற்சியாளராக நியமிக்க விரும்பியது. ஆனால், ரவி சாஸ்திரி பிடி கொடுக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் ரெய்னா மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் ஐ.பி.எல். தொடரில் வர்ணனை செயல்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இந்தியில் வர்ணனை செய்ய இருக்கிறார்கள்.

    Next Story
    ×