என் மலர்
விளையாட்டு

பிரதமர் மோடி
கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா பெற்ற வெற்றி பெருமை அளிக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்
உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் 8-வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனைத் தோற்கடித்ததால் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது. திறமை மிகுந்த பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி
Next Story






