search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டாஸ்
    X
    டாஸ்

    தொடரை தீர்மானிக்கும் டெஸ்ட்: இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ள நிலையில், ஹனுமா விஹாரி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் விராட் கோலி காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த போட்டியில் விராட் கோலி விளையாடுவதால், ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார்.

    முகமது சிராஜ் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ரிஷாப் பண்ட், 7. அஸ்வின், 8 ஷர்துல் தாகூர், 9. முகமது சமி, 10. பும்ரா, 11. உமேஷ் யாதவ்.
    Next Story
    ×