என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
இந்திய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது - லோகேஷ் ராகுல் மகிழ்ச்சி
Byமாலை மலர்31 Dec 2021 5:08 AM GMT (Updated: 31 Dec 2021 5:08 AM GMT)
சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.
அந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இந்த ஆண்டு அசத்தல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 5-வது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 328 ரன் இலக்கை எடுத்து இந்திய சரித்திர படைத்தது.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டும் சிறப்பாக அமைந்தது என்று லோகேஷ் ராகுல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்கு இதுஒரு சூப்பர் ஸ்பெஷல் ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு நாம் பெற்றுள்ள சாதனைகள் உண்மையிலேயே சிறப்பானவை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு நிறைய கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் தேவைப்பட்டது. சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த நேரத்தில் டிரஸ்சிங் அறை சூழல் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு சிறந்த டெஸ்ட் வெற்றி தொடரின் முதல் ஆட்டத்தில் அணியின் முழு செயல்திறனை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வெற்றியை ஒருநாள் கொண்டாடிவிட்டு மீண்டும் பயிற்சிக்கு திரும்புவோம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கவனம் செலுத்த தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந் தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X