என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேப்டன் பதவியில் இருந்து கோலி முழுமையாக விலக வேண்டும் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொல்கிறார்
Byமாலை மலர்14 Nov 2021 4:03 AM GMT (Updated: 14 Nov 2021 4:03 AM GMT)
20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
லாகூர்:
20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் விராட்கோலி 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோலி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், ‘விராட்கோலி, இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான சக்தியாக இருக்கிறார். 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.
தற்போது அவர் எல்லா வகையிலான போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்க முடிவு செய்தால் அவருக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து முழுமையாக விலகி தனக்கு எஞ்சியிருக்கும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர் ஒரு வீரராக ஆடினால் மனதில் வேறு எந்தவித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாடி இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது நல்ல முடிவாகும். அவருடன் ஐ.பி.எல். போட்டியில் நான் ஒரு வருடம் விளையாடி இருக்கிறேன். அவர் அற்புதமான வீரர் மட்டுமின்றி அணியை நன்கு வழிநடத்தும் மனதிறமையும் கொண்டவர். அமைதியான அணுகுமுறையை கொண்ட அவர் தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் செயல்படக்கூடியவர். அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பலமுறை வெற்றிகரமாக வழிநடத்தி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X