search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச்
    X
    ஆரோன் பிஞ்ச்

    ஆறுதல் அளித்த ஆரோன் பிஞ்ச்... இங்கிலாந்துக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் சேர்த்தார். ஆஸ்டர் அகர் 20 ரன், மேத்யூ வேட் 18 ரன் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட், கிறிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    Next Story
    ×