என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். ஏலம் - 2 புதிய அணிகள் நாளை அறிவிப்பு
Byமாலை மலர்24 Oct 2021 6:38 AM GMT (Updated: 24 Oct 2021 6:38 AM GMT)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய்:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.
ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.
ஐ.பி.எல். போட்டி 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடக்கிறது. ஒவ்வொரு அணியின் அடிப்படை விலை ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் இந்த ஏலத்தில் அதானி குழுமம், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், நவீன் ஜிண்டாலின் ஜிண்டால் ஸ்டீல், அரபிந்தோ மருந்து நிறுவனம், இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, கவுகாத்தி, இந்தூர், லக்னோ ஆகிய நகரங்களை மையமாக வைத்தே அணிகளின் ஏலம் இருக்கும். ஒரு நிறுவனம் எத்தனை பெயர்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.எல். புதிய அணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல்.லின் 2 புதிய அணிகள் எவை? யார் வாங்கியுள்ளனர் என்ற விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.
ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.
ஐ.பி.எல். போட்டி 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடக்கிறது. ஒவ்வொரு அணியின் அடிப்படை விலை ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் இந்த ஏலத்தில் அதானி குழுமம், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், நவீன் ஜிண்டாலின் ஜிண்டால் ஸ்டீல், அரபிந்தோ மருந்து நிறுவனம், இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, கவுகாத்தி, இந்தூர், லக்னோ ஆகிய நகரங்களை மையமாக வைத்தே அணிகளின் ஏலம் இருக்கும். ஒரு நிறுவனம் எத்தனை பெயர்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.எல். புதிய அணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல்.லின் 2 புதிய அணிகள் எவை? யார் வாங்கியுள்ளனர் என்ற விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X