என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியோடு இணைந்தார் டோனி
Byமாலை மலர்18 Oct 2021 4:52 AM GMT (Updated: 18 Oct 2021 4:52 AM GMT)
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 2-வது சுற்றில் நேரடியாக விளையாடும் இந்திய அணி குரூப் 2 பிரிவில் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 24-ந்தேதி எதிர்கொள்கிறது.
துபாய்:
இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.
அவரது தலைமையிலான இந்திய அணி 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் கைப்பற்றியது. அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் பெற்றுக்கொடுத்தார்.
சர்வதேச போட்டியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்த டோனி தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்தார்.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக 40 வயதான டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.
டோனியின் அறிவுரை, தந்திரமான முடிவு இந்திய அணிக்கு தேவைப்படுவதால் அவரை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து உள்ளது. அதன்படி அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் டோனி இந்திய அணியோடு இணைந்து கொண்டார். ஐ.பி.எல். போட்டியை முடித்த பிறகு அவர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கி இருந்தார். 20 ஓவர் உலக கோப்பை போட்டி அங்கு நடைபெறுவதால் அவர் இந்திய அணியோடு சேர்ந்து கொண்டார். பயிற்சியின் போது டோனியின் ஆலோசனை இந்திய வீரர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது சுற்றில் நேரடியாக விளையாடும் இந்திய அணி குரூப் 2 பிரிவில் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 24-ந்தேதி எதிர்கொள்கிறது. நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் விளையாடுகிறது.
20 ஓவர் உலககோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.
இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.
அவரது தலைமையிலான இந்திய அணி 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் கைப்பற்றியது. அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் பெற்றுக்கொடுத்தார்.
சர்வதேச போட்டியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்த டோனி தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்தார்.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக 40 வயதான டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.
டோனியின் அறிவுரை, தந்திரமான முடிவு இந்திய அணிக்கு தேவைப்படுவதால் அவரை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து உள்ளது. அதன்படி அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் டோனி இந்திய அணியோடு இணைந்து கொண்டார். ஐ.பி.எல். போட்டியை முடித்த பிறகு அவர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கி இருந்தார். 20 ஓவர் உலக கோப்பை போட்டி அங்கு நடைபெறுவதால் அவர் இந்திய அணியோடு சேர்ந்து கொண்டார். பயிற்சியின் போது டோனியின் ஆலோசனை இந்திய வீரர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது சுற்றில் நேரடியாக விளையாடும் இந்திய அணி குரூப் 2 பிரிவில் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 24-ந்தேதி எதிர்கொள்கிறது. நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் விளையாடுகிறது.
20 ஓவர் உலககோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X