search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீராபாய் சானு
    X
    மீராபாய் சானு

    மீராபாய் சானுவுக்கு ஏஎஸ்பி பதவி வழங்கும் மணிப்பூர் அரசு

    ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க உள்ளது.
    இம்பால்:

    ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    ஒலிம்பிக் பதக்கத்துடன் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பிய மீராபாய்க்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மீராபாய் சானுவுக்கு வரவேற்பு

    இந்நிலையில், ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

    மீராபாய் சானுவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×