என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2-வது பகுதி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஷ்ரேயாஸ் அய்யர் வருகை
Byமாலை மலர்5 July 2021 12:19 PM GMT (Updated: 5 July 2021 12:20 PM GMT)
ஐபிஎல் முதல் பகுதியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2021 சீசன் இந்தியாவில் நடைபெற்றது. ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்பால் கிரிக்கெட்டில் விளையாடினார். பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் 2021 சீசனில் விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்ததால், அந்த அணி ரிஷாப் பண்ட்-ஐ மாற்று கேப்டனாக அறிவித்தது. ரிஷாப் பண்ட் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக விளையாடியது. 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துவிடும்.
ஆனால் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வீரர்களை தாக்க ஆரம்பித்தது. இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவேன் என அவரே தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்தபோது எடுத்த படம்
ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லிக்கு அணிக்கு திரும்பினால், யாரை கேப்டனாக செயல்பட வைப்பது என்ற தலைவலி அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவி குறித்து எனக்குத் தெரியாது. அது உரிமையாளர்கள் கையில் உள்ளது. ஆனால், டெல்லி அணி சிறப்பாக விளையாடி முதலிடத்தில் உள்ளது. இதுதான் எனக்கு முக்கியமான விசயம். என்னுடைய இலக்கே, டெல்லி அணிக்கு முதன்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X