என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் பார்சிலோனா கிளப்பில் ஆடுவார்
Byமாலை மலர்3 Jun 2021 10:44 AM GMT (Updated: 3 Jun 2021 10:44 AM GMT)
பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஒப்பந்தம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.
பார்சிலோனா:
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெஸ்சி தனது சிறு வயதில் இருந்தே பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி அந்த அணியை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றார். 33 வயதான அவர் கடந்த சில ஆண்டாகவே பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகி மான்செஸ்டர் அணிக்கு விளையாடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலை காரணமாக மெஸ்சியால் பார்ச்சிலோனா கிளப்பை விட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஒப்பந்தம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.
மெஸ்சியின் ஒப்பந்தத்தை நீட்டித்து கொள்ள பார்சிலோனா கிளப் முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த கிளப்பின் நிர்வாகிகள் அவருடன் தொடர்பு பேசினார்கள். பார்சிலோனா கிளப்பில் நீடிக்க மெஸ்சி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெஸ்சி தனது சிறு வயதில் இருந்தே பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி அந்த அணியை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றார். 33 வயதான அவர் கடந்த சில ஆண்டாகவே பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகி மான்செஸ்டர் அணிக்கு விளையாடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலை காரணமாக மெஸ்சியால் பார்ச்சிலோனா கிளப்பை விட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஒப்பந்தம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.
மெஸ்சியின் ஒப்பந்தத்தை நீட்டித்து கொள்ள பார்சிலோனா கிளப் முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த கிளப்பின் நிர்வாகிகள் அவருடன் தொடர்பு பேசினார்கள். பார்சிலோனா கிளப்பில் நீடிக்க மெஸ்சி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X