search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட்கோலி
    X
    விராட்கோலி

    இந்திய அணியின் தனிமைப்படுத்துதல் வளையத்தில் இணைந்தார் விராட்கோலி

    இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
    மும்பை:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது. இதனை அடுத்து அங்கு இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த தொடர் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதேபோல் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் பயணித்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணிகள் மும்பையில் இருந்து வருகிற 2-ந்தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு இங்கிலாந்துக்கு செல்கிறது.

    இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்திய அணியினரின் தனிமைப்படுத்துதல் நடைமுறை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதற்காக வீரர், வீராங்கனைகள் தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டலில் உள்ள கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே இணைந்து விட்டனர். இதில் பங்கேற்பதில் இருந்து 6 நாட்கள் சிறப்பு சலுகை பெற்று இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் நேற்று பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர்.

    இங்கிலாந்துக்கு கிளம்பும் முன்னதாக அனைவருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×