என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் தந்தை கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்13 May 2021 4:41 AM GMT (Updated: 13 May 2021 4:41 AM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
கொரோனாவின் 2-வது அலை தாக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கையும், உயிர்பலியும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
ஆர்.பி.சிங்கின் தந்தை சிவபிரசாத் சிங். இவர் கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதை ஆர்.பி.சிங். தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரெய்னா, ரமேஷ் பவார், ஓஜா உள்ளிட்ட வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கிரிக்கெட் வீரர்களான பியூஸ் சாவ்லா, சேத்தன் சக்கரியா ஆகியோரின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X