என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரண்டாவது டி20 போட்டி - பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
Byமாலை மலர்12 April 2021 7:15 PM GMT (Updated: 12 April 2021 7:15 PM GMT)
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஜோகன்ஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான் மற்றும் சர்ஜூல் கான் களமிறங்கினர்.
முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சர்ஜூல் கான் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஹபீஸ் கேப்டன் பாபருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளை சந்தித்த ஹபீஸ் 32 ரன்கள் குவித்து அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.
தென்ஆப்பிரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டி, வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர். மாலன் 15 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லூபி 12 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் கிளாசன், மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை சந்தித்த மார்க்ரம் 3 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில் 14 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் வெற்றி இலக்கான 141 ரன்களை தென்ஆப்பிரிக்கா எட்டியது. இதன்மூலம் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. கேப்டன் கிளாசன் 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X