search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவுட் இல்லை என்பதை தெளிவாக காட்டும் ரீப்ளே காட்சி
    X
    அவுட் இல்லை என்பதை தெளிவாக காட்டும் ரீப்ளே காட்சி

    சூர்யகுமார் யாதவ் அவுட் சர்ச்சை... மூன்றாவது நடுவரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

    மூன்றாவது நடுவர் ஸ்லோ-மோஷனில் ரீப்ளே செய்து பார்த்தபோது, காட்சியை கூர்ந்து கவனித்தால், மாலனின் விரல்களுக்கு இடையில் பந்து தரையைத் தொட்டது தெளிவாக தெரிந்தது.
    அகமதாபாத்:

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 4-வது டி20 போட்டி, அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரது அதிரடி தொடர்ந்தால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 31வது பந்தை எதிர்கொண்ட அவர் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவரை அவுட் ஆக்கிய விதம், மூன்றாவது நடுவரின் முடிவு கடும் சர்ச்சைக்குள்ளானது.

    சாம் குர்ரன் வீசிய அந்த பந்தை, சூர்யகுமார் யாதவ் லாவகமாக பவுண்டரிக்கு திருப்பினார். பந்து தரையை தொடும் நிலையில், டேவிட் மலன் டைவ் அடித்து பந்தை பிடித்தார். கள நடுவர் அனந்த பத்மநாபன், அவுட் கொடுத்தார்.  எனினும், இதை உறுதி செய்வதற்கு மூன்றாவது நடுவர் வீரேந்திர சர்மாவுக்கு பரிந்துரை செய்தார். 

    மூன்றாவது நடுவர் பல முறை ஸ்லோ-மோஷனில் ரீப்ளே செய்து பார்த்தார். முன்பகுதியை கூர்ந்து கவனித்தால், மாலனின் விரல்களுக்கு இடையில் பந்து தரையைத் தொட்டது தெளிவாக தெரிந்தது. இருப்பினும், சரியாக புலப்படவில்லை என நினைத்து கள நடுவரின் முடிவையே மூன்றாவது நடுவர் கூற, சூர்யகுமார் யாதவ் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவுக்கு அவுட் கொடுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்றாவது நடுவரின் முடிவை முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் கண்டித்தனர். 

    சூர்யகுமார் யாதவ் அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இருந்தும் இந்த முடிவு எப்படி வழங்கப்படுகிறது? மோசமான முடிவு. மூன்றாவது நடுவர் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு கூறியிருக்கிறார் என  சரமாரியாக திட்டி தீர்த்தனர். மீம்ஸ்களையும் வெளியிட்டு கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டரில் #NotOut #SuryakumarYadav ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆனது.
    Next Story
    ×