search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பண்ட், ஜேக் லீச்
    X
    ரிஷப் பண்ட், ஜேக் லீச்

    ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடும் ஆசை போதும் என நினைக்க வைத்துட்டார்: ஜேக் லீச்

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரை துவம்சம் செய்த ரிஷப் பண்ட், அவரது சிந்தனையை மாற்றும் அளவிற்கு செய்து விட்டார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசதத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சை பந்து வீச்சை கிழிகிழி என கிழித்துவிட்டார்.

    8 ஓவர்களில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் 2-வது இன்னிங்சில் ஜேக் லீச் ரோகித் சர்மா, புஜாரா விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ரிஷப் பண்ட் இவரது பந்து வீச்சை துவம்சம் செய்தது குறித்து கூறுகையில் ‘‘8 ஓவரில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்த பிறகு, நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேனா, என்பது எனக்கே உறுதியாக தெரியவில்லை என் நிலையில் இருந்தேன். ஆகவே, அந்த பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு, அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்ததால் மிகவும் பெருமை அடைகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×