என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடும் ஆசை போதும் என நினைக்க வைத்துட்டார்: ஜேக் லீச்
Byமாலை மலர்11 Feb 2021 3:29 PM GMT (Updated: 11 Feb 2021 3:29 PM GMT)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரை துவம்சம் செய்த ரிஷப் பண்ட், அவரது சிந்தனையை மாற்றும் அளவிற்கு செய்து விட்டார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசதத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சை பந்து வீச்சை கிழிகிழி என கிழித்துவிட்டார்.
8 ஓவர்களில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் 2-வது இன்னிங்சில் ஜேக் லீச் ரோகித் சர்மா, புஜாரா விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ரிஷப் பண்ட் இவரது பந்து வீச்சை துவம்சம் செய்தது குறித்து கூறுகையில் ‘‘8 ஓவரில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்த பிறகு, நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேனா, என்பது எனக்கே உறுதியாக தெரியவில்லை என் நிலையில் இருந்தேன். ஆகவே, அந்த பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு, அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்ததால் மிகவும் பெருமை அடைகிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X