search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரேஷ் ரெய்னா
    X
    சுரேஷ் ரெய்னா

    சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது?- முழு விவரம்

    ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் ஹர்பஜன் சிங். முரளி விஜய், கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோரை விடுவித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடைக்காலம் முடிவடைந்து 2018-ல் களம் இறங்கியது. முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது. 2019-ல் 2-வது இடம் பிடித்தது. ஆனால் 2020 சீசனில் மிகவும் மோசமாக விளையாடியது. முதல் அணியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறியது.

    அணியில் ஏராளமான வயதான வீரர்களை வைத்துள்ளதுதான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்தினர். மேலும் சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து அவசரமாக இந்தியா திரும்பினார். இதுவும் முக்கிய காரணம்.

    ஹர்பஜன் சிங்

    2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைக்குள் (ஜனவரி 20-ந்தேதி) தக்கவைத்துள்ள வீரர்கள், வெளியேற்றியுள்ள வீரர்களின் பட்டியலை சமர்பிக்க ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹர்பஜன் சிங், கேதர் ஜதவ், முரளி விஜய், பியூஷ் சாவ்லா ஆகியோரை அணிணில் இருந்து விடுவித்துள்ளது. சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்துள்ளது.
    Next Story
    ×