search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிக்கி பாண்டிங்
    X
    ரிக்கி பாண்டிங்

    இந்தியா 200 ரன்னைத் தாண்டாது: ரிக்கி பாண்டிங் சொல்கிறார்

    சிட்னி டெஸ்டின் கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 309 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்தியா 200 ரன்னைத் தாண்டாது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

    இந்தியா 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளில் 309 ரன்கள் தேவை. புஜாரா, ரஹானே களத்தில் உள்ளனர். இருவரும் முதல் செசன் வரை ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி அல்லது டிராவை எதிர்பார்க்கலாம். ஒருவர் முன்னதாக ஆட்டமிழந்தாலும் இந்தியா தோல்வியை சந்திக்கும்.

    புஜாரா, ரஹானே சிறந்த வீரர்கள். அவர்கள் டெஸட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இந்தியா 200 ரன்களை தாண்டாது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    பேட்டிங் செய்வதற்கு சாதகமான சிட்னி ஆடுகளத்தில் 4-வது மற்றும் கடைசி நாளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். 4-வது இன்னிங்சில் இந்த மைதானத்தில் சராசரி 168 ரன்களே ஆகும்.

    இந்தியா சிட்னியில் நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது. ஏனென்றால் இரண்டு போட்டிகளிலும் முடிவு எட்டப்படவில்லை.
    Next Story
    ×