என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் செசன் மிக முக்கியமானது: அஸ்வின் சொல்கிறார்
Byமாலை மலர்10 Jan 2021 12:41 PM GMT (Updated: 10 Jan 2021 12:41 PM GMT)
சிட்னி டெஸ்டில் நாளைய போட்டியின் முதல் செசன் மிக முக்கியமானது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா நம்பிக்கையுடன் விளையாடினார். ஆனால் 52 ரன்கள் எடுத்த நிலையில், புல் ஷாட் அடித்து பேட் கம்மின்ஸ் பந்தில் மாட்டிக்கொண்டார்.
4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா, ரஹானே களத்தில் உள்ளனர். கடைசி நாளில் 309 ரன்கள் தேவை.
இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால் நாளைய முதல் செசன் மிகமிக முக்கியமானது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நாளை முதல் செசனில் சிறப்பாக விளையாடுவது எங்களுக்கு முக்கியமானது. முதல் செசனில் விக்கெட் இழக்கக் கூடாது. களத்தில் இருக்கும் இருவரும் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.
மெல்போர்னில் ரஹானே செஞ்சூரி அடித்தார். புஜாரா முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X