search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீகாந்த்
    X
    ஸ்ரீகாந்த்

    ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது அல்ல: ஸ்ரீகாந்த் சொல்கிறார்

    ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் ஸ்மித், டேவிட் வார்னரை நம்பியே இருக்கிறது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை இந்தியாவின் பந்து வீச்சு அசைத்துவிடுமா? என்பதுதான் பேச்சு பொருளாக இருந்தது. ஆனால், அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 244 ரன்கள் எடுத்தபோது, ஆஸ்திரேலியா 191 ரன்னில் சுருண்டது.

    மெல்போர்ன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது எனக்கூற முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘விராட் கோலியை நீங்கள் மிஸ் செய்யும்போது, உண்மையைச் சொல்லப்போனால், அது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும். அதேபோல் ஷமியும் இல்லை. இருந்தாலும் இந்திய அணி கடும் சவாலாக இருப்பார்கள். எல்லோருமே ஏமாற்றம் அடைந்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் அதை கெட்ட கனவாக எடுத்துக் கொண்டார்கள்.

    ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. வார்னர் 30 சதவீதம், ஸ்மித் 30 சதவீதம், மற்ற அனைவரும் சேர்ந்து 30 சதவீதம் என்பதுதான் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், பந்து வீச்சு மிகச்சிறப்பு. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிக வலுவானது அல்ல’’ என்றார்.
    Next Story
    ×