search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்
    X
    ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்

    பிங்க்-பால் டெஸ்ட் போட்டிக்கு நாங்கள் ரெடி: சதம் விளாசிய ஹனுமா விஹாரி சொல்கிறார்

    அடிலெய்டு பிங்க்-பால் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பாடு திட்டாட்டம்தான்.

    இந்திய அணி வங்காளதேசத்திற்கு எதிராக ஒரேயொரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் விளையாடியுள்ளது.

    அடிலெய்டு டெஸ்டுக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடியது. இதில் மிடில் ஆரடர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பி்ங்க்-பாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என விஹாரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஹாரி கூறுகையில் ‘‘ரெட் பந்தில் விளையாடிய பின்னர், பகல்-இரவு டெஸ்ட் போட்டிற்கான பிங்க்-பாலில் விளையாட பழகுவது மிகவும் சவாலானது. பேட்டிற்கு பந்து சிறந்த முறையில் வருகிறது. முதல் நாளில் சீம் மூவ்மென்ட் இருந்ததாக கருதுகிறேன். இந்த பந்திற்கு ஏற்றபடி பழகுவது மிகவும் சவாலானது. தற்போது இந்திய அணி மிகச் சிறப்பாக தயார்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன்.

    டெஸ்ட் போட்டிக்கு சற்று முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது சிறந்த பயிற்சியாக இருந்து என உணர்கிறேன். நாங்கள் தரமான எதிரணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம்’’ என்றார்.
    Next Story
    ×