என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்
Byமாலை மலர்30 Nov 2020 3:12 PM GMT (Updated: 30 Nov 2020 3:13 PM GMT)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம். இவர் தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விராட் கோலியுடன் ஒப்பிட்டுவதையும், இந்திய ரசிகர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் சில சிறந்த வீரர்களுடன் ஒப்பிடுவதை சிறந்ததாக உணர்கிறேன். என்னுடைய மனநிலையில் எனக்கு நானே சவாலை உருவாக்கிக் கொள்வேன். எனக்கு நானே டார்கெட் ஏற்படுத்திக் கொள்வேன். நான் போகிஸ்தான் அணிக்காக வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும். வெற்றி பெற்ற போட்டிகள் அணிக்கு உதவியாக இருக்க வேண்டும்.
பெரிய வீரர்களுடன் ஒப்பிடுவது, ஒரு இலக்கை நிர்ணயிக்க உதவியாக இருக்கும். மிகப்பெரிய ஐந்து வீரர்களுடன் ஒப்பிடுவது சிறந்த உணர்வாகும். உயர்ந்த நிலையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது உங்களுடைய உறுதிக்கு பூஸ்ட்-ஆக அமையும். அதை நான் விரும்புகிறேன்.
என்னுடைய சிறந்த ஆட்டத்தால் ரசிகர்களை வென்றுள்ளேன். இந்தியாவிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து எனக்கு பின்னால் இருக்க வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X