search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ரசிகர் ஆஸ்திரேலிய தோழி
    X
    இந்திய ரசிகர் ஆஸ்திரேலிய தோழி

    காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்

    இந்தியா- ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய இளைஞரும் ஆஸ்திரேலிய இளம்பெண்ணும் தங்களது காதலை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்று முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது

    இதையடுத்து 2-ஆவது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களை எடுத்தது. அந்த அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் என நால்வரும் அரை சதமடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

    இதையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வினையாடிய இந்திய அணி 338 ரன்கள் மட்டுமே எடுத்து 51 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    இதனிடையே இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம், ஸ்டேடியத்திற்குள் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லியுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன்,அந்த காதல் ஜோடி கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
    Next Story
    ×