என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு வேகத்துடன் பந்து வீசிய இஷாந்த் சர்மா: ஆஸி. பறக்க வாய்ப்பு
Byமாலை மலர்19 Nov 2020 12:38 PM GMT (Updated: 19 Nov 2020 12:38 PM GMT)
ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் இஷாந்த் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு வேகத்துடன் பந்து வீசி வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். காயம் காரணமாக தொடக்கத்தில் விளையாடாமல் இருந்தார். அதன்பின் ஒரேயொரு போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது பக்கம் இடுப்புப் பகுதியில் தசைநார் கிழிந்தது.
இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
தொடருக்கு இன்னும் ஒருமாதம் இருப்பதால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட், பிசியோ ஆஷிஷ் கவுசிக் ஆகியோர் மேற்பார்வையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார். விரைவில் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X