என் மலர்
செய்திகள்

டீம் இந்தியா
ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டனர் இந்திய அணி வீரர்கள்
ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளா இன்றே இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.
ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நேற்று வரை (நவம்பர் 10) நடைபெற்றது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்து ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த வீரர்களும், இடம் பெறாமல் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தவர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.
ஐபிஎல் தொடர் முடிந்த மறுநாளே ஓய்வின்றி அப்படியே சென்றுள்ளனர்.
Next Story






