search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரென்ட் போல்ட், ரோகித் சர்மா
    X
    டிரென்ட் போல்ட், ரோகித் சர்மா

    டிரென்ட் போல்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவாரா?: ரோகித் சர்மா சொல்வது என்ன?...

    ஸ்விங் பந்தால் அசத்தி வரும் டிரென்ட் போல்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக விளையாடுவாரா? என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதில் அளித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் டிரென்ட் போல்ட் அபாரமாக பந்து வீசி வருகிறார். புதுப்பந்து ஸ்விங் செய்ய சாதகமாக இருப்பதால் டிரென்ட் போல்ட் தொடக்க வீரர்களை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 14 போட்டிகளில் 22 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    குவாலிபையர் 1-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 2 ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில், அதன்பின் பந்து வீசவில்லை. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் பந்து வீசிய போதிலும் டிரென்ட் போல்ட் பீல்டிங் செய்யவில்லை.

    இதனால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘டிரென்ட் போல்ட் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் எங்களுடன் இன்று பயிற்சி மேற்கொண்டார். அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

    அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரபடா 29 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், பும்ரா 27 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். டிரென்ட் போல்ட் 3-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×