என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன்’ - ஆயிரம் சிக்சர் அடித்த கெய்லுக்கு ஷேவாக் புகழாரம்
Byமாலை மலர்31 Oct 2020 8:35 PM GMT (Updated: 31 Oct 2020 8:35 PM GMT)
20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல் என இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்
அபுதாபி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் (63 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்ட கோபத்தில் கெய்ல் பேட்டை தரையில் ஓங்கி அடித்தார். அது கைநழுவி சில அடி தூரம் பறந்து விழுந்தது. அவரது செயல் வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. போட்டி நடுவர் விசாரித்த போது கெய்ல் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் சிக்சர்களை (410 ஆட்டத்தில் 1,001 சிக்சர்) கடந்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்லுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல். இந்த வடிவிலான கிரிக்கெட்டில் அவர் மகத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களை குதூகலப்படுத்துவதில் தந்தை’ என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘41 வயது வீரர் வியப்புக்குரிய வகையில் 99 ரன்கள் எடுத்ததை இப்போது தான் பார்த்தேன். அது மட்டுமின்றி 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்சர். கேள்விக்கே இடமின்றி அனைத்து காலத்திலும் 20 ஓவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கெய்ல் இருப்பார்’ என்று குறிப்பிட்டார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் (63 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்ட கோபத்தில் கெய்ல் பேட்டை தரையில் ஓங்கி அடித்தார். அது கைநழுவி சில அடி தூரம் பறந்து விழுந்தது. அவரது செயல் வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. போட்டி நடுவர் விசாரித்த போது கெய்ல் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் சிக்சர்களை (410 ஆட்டத்தில் 1,001 சிக்சர்) கடந்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்லுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல். இந்த வடிவிலான கிரிக்கெட்டில் அவர் மகத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களை குதூகலப்படுத்துவதில் தந்தை’ என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘41 வயது வீரர் வியப்புக்குரிய வகையில் 99 ரன்கள் எடுத்ததை இப்போது தான் பார்த்தேன். அது மட்டுமின்றி 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்சர். கேள்விக்கே இடமின்றி அனைத்து காலத்திலும் 20 ஓவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கெய்ல் இருப்பார்’ என்று குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X