search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்ட்யா, கிறிஸ் மோரிஸ்
    X
    ஹர்திக் பாண்ட்யா, கிறிஸ் மோரிஸ்

    நடுவரின் கண்டிப்புடன் தப்பித்த ஹர்திக் பாண்ட்யா, கிறிஸ் மோரிஸ்

    ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் போட்டியின்போது மோதிக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா - கிறிஸ் மோரிஸ் ஆகியோர் நடுவரின் கண்டிப்புடன் தப்பித்தனர்.
    ஐபிஎல் தொடரில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஏறக்குறைய பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ஆக்ரோசமக விளையாடினர்.

    மும்பை அணி சேஸிங் செய்தபோது 19-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். அந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். 16 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் மூன்று பந்தில் மூன்று ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ்.

    4-வது பந்தை ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு தூக்கினார். 15-வது ஓவரை வீசும்போது கிறிஸ் மோரிஸ் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வைடு கோட்டை ஒட்டி பந்து வீசினார். இதனால் கடுப்பான ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ் அடித்ததும் கிறிஸ் மோரிஸை நோக்கி ஏதோ கூறினார்.

    அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். இதனால் கோபத்துடன் இருந்த கிறிஸ் மோரிஸ் கடும் கோபத்தில் ஹர்திக் பாண்ட்யாவை நோக்கி ஏதோ கூறினார். உடனே ஹர்திக் பாண்ட்யா டிரஸ்ஸிங் ரூம் நோக்கி கையை காட்டு ஏதோ கூறிச் சென்றார்.

    இருவருடைய செயலும் ஐபிஎல் வீரர்களின் நன்னடத்தை மீறி்ய செயலாக இருந்தது. லெவன்-1 என்பதால் நடுவரின் கண்டிப்புடன் இருவரும் தப்பித்தனர்.
    Next Story
    ×