என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் : ஒரு நாள், 20 ஓவர் போட்டி அட்டவணை
Byமாலை மலர்22 Oct 2020 8:38 PM GMT (Updated: 22 Oct 2020 8:38 PM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், 3-வது ஆட்டத்தை கான்பெர்ராவிலும் விளையாடுகிறது.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையொட்டி வீரர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக சிட்னி நகரை உள்ளடக்கிய நியூசவுத்வேல்ஸ் மாகாண அரசுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி ஐ.பி.எல். முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடைமுறையாக சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதே போல் ஆஸ்திரேலிய வீரர்களும் சிட்னியில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள். அச்சமயம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்ததும் அதிகாரபூர்வ போட்டி அட்டவணை வெளியாகும்.
உத்தேச பட்டியலின்படி இந்திய அணி நவம்பர் 27, 29-ந்தேதிகளில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், டிசம்பர் 1-ந்தேதி 3-வது ஆட்டத்தை கான்பெர்ராவிலும் விளையாடுகிறது. இவ்விரு நகரங்களிலேயே டிச.4, 6, 8-ந்தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக டிச.17 முதல் 21-ந்தேதி வரை அடிலெய்டில் நடக்கிறது. தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய நகரங்களிலும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையொட்டி வீரர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக சிட்னி நகரை உள்ளடக்கிய நியூசவுத்வேல்ஸ் மாகாண அரசுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி ஐ.பி.எல். முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடைமுறையாக சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதே போல் ஆஸ்திரேலிய வீரர்களும் சிட்னியில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள். அச்சமயம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்ததும் அதிகாரபூர்வ போட்டி அட்டவணை வெளியாகும்.
உத்தேச பட்டியலின்படி இந்திய அணி நவம்பர் 27, 29-ந்தேதிகளில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், டிசம்பர் 1-ந்தேதி 3-வது ஆட்டத்தை கான்பெர்ராவிலும் விளையாடுகிறது. இவ்விரு நகரங்களிலேயே டிச.4, 6, 8-ந்தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக டிச.17 முதல் 21-ந்தேதி வரை அடிலெய்டில் நடக்கிறது. தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய நகரங்களிலும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X