search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    எல்லா பந்துகளையும் மைதானத்தின் கேலரிக்கு அடிக்க முடியாது: விராட் கோலி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான வெற்றி, எங்களுடைய முற்றிலும் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 90 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    போட்டிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் ‘‘கண்டிசனை புரிந்து கொண்டு விளையாட்டிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக எல்லா பந்துகளையும் ரசிகர்கள் கேலரிக்கு அனுப்ப முயற்சி செய்ய முடியாது. அதிகமான போட்டிகளில் குறிப்பாக டி20-யில் விளையாடி உள்ளதால், டெத் ஓவரின்போது செட் ஆகி விட்டால், அதை சாதகமாக்கி கொள்ள முடியும் என்பதை கற்றுள்ளேன்.

    சென்னைக்கு எதிராக எங்களுடைய மிகவும் சிறந்த பெர்ஃபார்மன்சில் ஒன்று. முதல் பாதி நேரத்தில் சற்று சிக்கலான நிலையை அடைந்தோம். அதிலிருந்து முன்னோக்கி நகர்ந்தோம். 2-வது டைம்அவுட் நேரத்தின்போது 140 முதல் 150 சிறந்த ஸ்கோராக இருக்கும் எனப் பேசிக்கொண்டோம்’’ என்றார்.
    Next Story
    ×