search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்சன், விராட் கோலி
    X
    வாட்சன், விராட் கோலி

    டெத் ஓவர், ஒபனிங், மிடில் ஆர்டர் சொதப்பல்: சிஎஸ்கே தோல்வி குறித்து ஒரு பார்வை

    டெத் ஓவர்களில் அதிகமான ரன்கள் விட்டுக் கொடுத்ததும், தொடக்க ஜோடி சறுக்கியதாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
    ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. துபாய் ஆடுகளம் கொஞ்சம் ட்ரிக் ஆனது என்பதால் கவனமாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு அணிகளும் களமிறங்கின.

    முதலில் பந்து வீசினால் 60 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீசியது.

    முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். தனது அபார இன்ஸ்விங் பந்தால் ஆரோன் பிஞ்ச்-ஐ திணறடித்தார். அவருக்கு சப்போர்ட்டா சாம் கர்ரன் அற்புதமாக பந்து வீசினார். இதனால் ஆர்சிபி தொடக்க ஜோடி ரன் அடிக்க முடியாமல் திணறினர்.

    3 ஒவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் 2 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார் ஆரோன் பிஞ்ச். இரண்டு பேரும் சூப்பராக பந்து வீச ஆர்சிபி பவர் பிளேயில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பின்னர் ஷர்துல் தாகூர் இவர்களுடன் இணைந்து சிறப்பாக பந்துவீச ஆர்சிபி 08 ஓவரில் 50 ரன்களே அடித்தது. 11-வது ஓவரை தாகூர் வீசினார். இந்த ஓவர் சென்னைக்கு சூப்பர் திருப்புமுனையாக அமைந்தது. படிக்கல் 33 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த டி வில்லியர்ஸ் இரண்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும் ஒரே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    அப்போது 11 ஓவர் முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களே எடுத்திருந்தது. ஒரு பக்கம் இழந்தாலும் மறுபக்கம் ஆர்.சி.பி. கேப்டன் நிலைத்து நின்று விளையாடினாலும், அவரால் விரைவாக ரன்கள் அடிக்க இயவில்லை.

    30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். சென்னையின் அபார பந்து வீச்சு காரணமாக ஆர்சிபி 16 ஓவரில் 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் விராட் கோலி தனது சுயரூபத்தை வெளிக்காட்டினார். சர்துல் தாகூர் வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தது ஆர்சிபி. அடுத்த ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவர்தான் சென்னை அணியிடம் இருந்து ஆர்சிபி அணியிடம் போட்டி கை மாறியது. அந்த ஓவர் 24 ரன்கள் அடித்த ஆர்சிபி, 19 ஓவரில் 14 ரன்களும், 20-வது ஓவரில் 16 ரன்கள் ஆர்சிபி விளாசியது.

    இதனால் 169 ரன்கள் குவித்து விட்டது. டெத் ஓவரான கடைசி 4 ஓவரில் மட்டும் ஆர்சிபி 66 ரன்கள் திரட்டி விட்டது. இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. முதல் 30 பந்தில் 34 ரன்கள் அடித்த விராட் கோலி அதன்பின் 22 பந்தில் 56 ரன் என 90 ரன்கள் விளாசி சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையை சிதறடித்து விட்டார்.

    பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பீஸ், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடினால் மட்டுமே சென்னைக்கு வெற்றி என்ற நிலை உருவாகி இருந்தால் நம்பிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் வாஷிங்டன் சுந்தர் வீசிய 4-வது ஓவரில் டு பிளிசிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 8 ரன்களில் ஏமாற்றம் அடைந்தார். அதுமட்டுமல்ல ஆறாவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச அந்த ஓவரில் 16 ரன்கள் எடுத்த நிலையில் வாட்சன் க்ளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். பவர் பிளே சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்டான வாஷிங்டன் சுந்தர் சென்னை அணியின் தோல்வியை அப்போதே உறுதி செய்து விட்டார். 

    பவர் பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களே அடிக்க முடிந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் அறிமுக வீரர் ஜெகதீசன் களமிறங்கினார் இவர்களால் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுக்க முடிந்ததே தவிர அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை.

    ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அம்பத்தி ராயுடு 42 ரன்னில் வெளியேறினார். டோனி இன்னைக்கு அடிப்பார் என்று பார்த்தால் அவரும் 10 ரன்னில் வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 132 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    டெத் ஓவரில் 66 ரன்கள், ஓபனிங் சொதப்பல், மிடில் ஆர்டர் சொதப்பல் என ஒட்டுமொத்தமாக சொதப்ப சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    Next Story
    ×