என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத் அணி எங்களை எல்லாத்துறைகளிலும் விரட்டியடித்து விட்டனர்: ரிக்கி பாண்டிங்
Byமாலை மலர்30 Sep 2020 10:18 AM GMT (Updated: 30 Sep 2020 10:18 AM GMT)
ஐதராபாத் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ரன்கள் குவித்தது, எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் பேர்ஸ்டோவின் அரைசதம் ஹைதராபாத் 162 ரன்கள் அடித்தது. டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் கடுமையான பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 102 ரன்கள் எடுத்தது.
பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. புவனேஷ்வர் குமார், ரஷித் கான், நடராஜன் ஆகியோரின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி கேப்பி்ட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் திணறினார்கள். இதனால் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ஆகவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பெற்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை கோட்டை விட்டது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘சீதோஷ்ண நிலை மாறுபட்டதாக நான் நினைக்கவில்லை இந்த மைதானம் மிகவும் பெரியது. பவுண்டரி எல்லை பெரியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எங்களை முற்றிலும் துவம்சம் செய்துவிட்டனர்.
எங்களுடைய சூப்பர் பார்மில் இருந்து சற்று தவறி விட்டோம். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்தது சிறப்பானது. மேலும் அவர்களில் சில பெரிய ஸ்கோரை எட்டிவிட்டனர். இதுதான் போட்டியின் முக்கியமான வேறுபாடு.
எங்களது முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் 60 அல்லது 70 ரன்கள் வரை எடுத்தால் நாங்கள் நிச்சயமாக அந்த போட்டியில் வெற்றி பெறுவோம். இந்தப் போட்டியை பார்த்தீர்கள் என்றால் நாங்கள் 15 ரன்களில் மட்டுமே தோல்வியடைந்தோம். இந்த தோல்வியால் நாங்கள் யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. ஒரு அணியாக தோல்வியை சந்தித்தோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X