என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்த்ரே ரஸல்தான் தற்போதைய நிலையில் சிறந்த ஆல்-ரவுண்டர்: கேகேஆர் இளம் வீரர் சொல்கிறார்
Byமாலை மலர்16 Sep 2020 1:55 PM GMT (Updated: 16 Sep 2020 1:55 PM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்த்ரே ரஸல்தான் தற்போதைய நிலையில் சிறந்த ஆல்-ரவுண்டர் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அந்த்ரே ரஸல் 2014-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆந்த்ரே ரஸல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 ஆட்டங்களில் 510 ரன்கள் குவித்தர். ஸ்டிரைக் ரேட் 204.81 ஆகும். அத்துடன் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் தற்போதைய நிலையில் அந்த்ரே ரஸலை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிங்கு சிங் கூறுகையில் ‘‘அந்த்ரே ரஸல் போன்று யாராலும் பந்தை சிறப்பாக அடிக்க முடியாது. அவரிடம் அதிகமான வலிமை உள்ளது. அவருடைய சிக்ஸ் மிகப்பெரியதாக இருக்கும். அவருடன் போட்டியிடும் அளவிற்கு மற்ற பேட்ஸ்மேன்களை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலையில் அவர்தான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்.
அவருடன் இணைந்து விளையாடினாலும் அதிகமாக பேசியது கிடையாது. ஏனென்றால், எனக்கு ஆங்கிலம் எளிதாக பேச வராது. ஆனால், வீரர்கள் அறையில் அவரது பிறந்த நாளை சந்தோசமாக கொண்டாடினோம். விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X