என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு தவறு ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும்: விராட் கோலி எச்சரிக்கை
Byமாலை மலர்25 Aug 2020 2:33 AM GMT (Updated: 25 Aug 2020 2:33 AM GMT)
ஒரு தவறு செய்தால் கூட ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும் என விராட் கோலி ஆர்சிபி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீகரம் சென்றுள்ளனர். தற்போது ஒருவார தனிமைப்படுத்துதலில் உள்ளனர். இந்த நேரத்தில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அணியின் சக வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஒரு தவறு செய்தால் கூட ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும் என விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நான் பின்பற்ற வேண்டும். பாதுபாப்பு வளையம் என்பதில் நான் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எந்த நேரத்திலும் இதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏனென்றால், ஒரு தவறு செய்தால், நம்முடன் உள்ள ஒருவரால் ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒருவர் கூட இதை விரும்பக்கூடாது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X