search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷுப்மான் கில்
    X
    ஷுப்மான் கில்

    ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும்: மெக்கல்லம்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையை வென்ற போது ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

    தற்போது 20 வயதாகும் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கவுதம் கம்பிர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். கடந்த முறை முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்ற பெற்ற போதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

    இதனால் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்தான் கேப்டனாக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘ஷுப்மான் கில் திறமையான, சிறந்த வீரர். அவர் குறைந்த பட்சம் சில திறன்களில் தலைமை பொறுப்பில் ஒரு பகுதியாக இருக்கப் போகிறார். அவர் இளம் வீரராக இருந்தாலும் கூட, நீண்ட நாட்களாக விளையாடினால்தான் சிறந்த கேப்டனாக முடியும் என்பதை நான் நம்புகிறவன் அல்ல. இது ஒரு தலைவரின் நடத்தைகளை வெளிப்படுத்துவதாகும். இந்த தொடர் முழுவதும் அவருக்கு தலைமை பொறுப்புகளில் சிலவற்றை வழங்க இருக்கிறோம்.

    தினேஷ் கார்த்திக்கை சற்று மாறுபட்ட பகுதியாக பிரித்து பார்க்க வேண்டும். நான் முதன்மையாக விக்கெட் கீப்பிங் பணியை நினைக்கிறேன். இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் அவரும் ஒருவர்’’ என்றார்.
    Next Story
    ×