search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்தர் - பிரதமர் மோடி - எம்எஸ் டோனி
    X
    அக்தர் - பிரதமர் மோடி - எம்எஸ் டோனி

    மோடி கோரிக்கை வைத்தால் டோனி டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு - அக்தர்

    2021 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் டோனியால் அதை மறுக்க முடியாது என்று அக்தர் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டோனியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

    இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால் டோனி ஓய்வு முடிவை விரைவில் அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டோனியின் ஒய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “டோனிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. அவர் 2021 டி-20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம். இருந்தாலும் ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு.

    இந்திய பிரதமர் மோடி தோனியிடம், 2021 டி-20 உலகக் கோப்பை வரை விளையாடலாம் என்று கோரிக்கை வைக்கலாம். அப்படி மோடி கோரிக்கை வைத்தால் அதை டோனியால் மறுக்க முடியாது. இதுபோன்று நிகழ்வுகள் பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளது. டோனி விரும்பினால் அவருக்கு விடைகொடுக்கும் போட்டி ஒன்றை நடத்தலாம்“ என்றும் சோயப் அக்தர் கூறியுள்ளார்.
    Next Story
    ×