என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - இங்கிலாந்து போட்டியை கொல்கத்தாவில் நடத்த வேண்டும்: பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள்
Byமாலை மலர்18 Aug 2020 9:39 AM GMT (Updated: 18 Aug 2020 9:39 AM GMT)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கொல்கத்தாவில் நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
அதன்பின் கொரோனா காரணமாக லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த 2-வது மற்றும் 3-வது போட்டிகள் கைவிடப்பட்டு தொடர் ஒத்தி்வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிதி ஆதாரத்தை இழந்துள்ளது. போட்டி ரத்து செய்யபட்டதால் உ.பி. கிரிக்கெட் சங்கமும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை ஈடுசெய்யும் வகையில் அடுத்த வருடம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்போது ஒரு போட்டியை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இரண்டு சங்கங்களும் ஈடுசெய்து கொள்ள முடியும் என பிசிசிஐ-க்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X