search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ ரூட், விராட் கோலி
    X
    ஜோ ரூட், விராட் கோலி

    இந்தியா - இங்கிலாந்து போட்டியை கொல்கத்தாவில் நடத்த வேண்டும்: பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள்

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கொல்கத்தாவில் நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் கொரோனா காரணமாக லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த 2-வது மற்றும் 3-வது போட்டிகள் கைவிடப்பட்டு தொடர் ஒத்தி்வைக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிதி ஆதாரத்தை இழந்துள்ளது. போட்டி ரத்து செய்யபட்டதால் உ.பி. கிரிக்கெட் சங்கமும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதை ஈடுசெய்யும் வகையில் அடுத்த வருடம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்போது ஒரு போட்டியை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இரண்டு சங்கங்களும் ஈடுசெய்து கொள்ள முடியும் என பிசிசிஐ-க்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    Next Story
    ×