என் மலர்
செய்திகள்

ரெய்னா, எம்எஸ் டோனி
ஓய்வு முடிவை அறிவித்த பின் கட்டிப்பிடித்து அழுதோம்: சுரேஷ் ரெய்னா
ஓய்வு முடிவை அறிவித்த பின்னர் நானும், எம்.எஸ். டோனியும் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுதோம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனி ரசிகர்களால் ‘தல’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். ரெய்னா ‘சின்ன தல’ என்று அழைக்கப்படுகிறார்.
இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக சென்னை வந்த நிலையில், சுதந்திர தினத்தன்று இருவரும் ஓய்வு முடிவை அறிவித்தனர்.
முடிவை அறிவித்த பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுதோம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘சென்னை அடைந்ததும் டோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது, ஆகவே, நான் தயாராக இருந்தேன். நான், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், கர்ண் சர்மா ஆகியோர் 14-ந்தேதி ராஞ்சிக்கு வாடகை விமானத்தோடு சென்றோம். அங்கிருந்து டோனியையும், மோனு சிங்கையும் அழைத்து வந்தோம்.
எங்களுடைய ஓய்வுக்குப்பின், நாங்கள் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுதோம். அதன்பின் நான், சாவ்லா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கர்ண் சர்மா என நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம். எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் எங்களுடைய உறவு குறித்து பேசினோம். இரவில் விருந்து நடைபெற்றது’’ என்றார்.
Next Story






