search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி, கவுதம் கம்பிர்
    X
    எம்எஸ் டோனி, கவுதம் கம்பிர்

    எம்.எஸ். டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திருக்கும்: கவுதம் காம்பிர்

    எம்.எஸ். டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திற்கும் என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. இவர் நேற்றுமுன்தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட்அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்ற கேப்டன் என்ற சாதனை எப்போதுமே நிலைத்திருக்கும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘ஒரு சாதனை பற்றி நீங்கள் பேசும்போது, மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற சாதனை எம்.எஸ். டோனியுடன் எப்போதும் இருக்கும். மற்ற எந்த கேப்டனும் இந்த சாதனையை (டி20 உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலக கோப்பை) முறியடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    இந்த விசேசமான சாதனை எப்போதுமே நிலைத்திருக்கும். இது எப்போதும் நிலைத்திருக்கும் என்று என்னால் பந்தயம் கூட கட்ட முடியும். இரட்டை சதம் கூட முறியடிக்கப்படலாம். யாராவது ஒரு பேட்ஸ்மேன் வந்து ரோகித் சர்மாவை விட அதிக டபுள் செஞ்சூரி அடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், எந்த கேப்டனாலும் மூன்று டிராபியை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே, டோனி அந்த சாதனையுடன் நிலைத்திருப்பார்.’’ என்றார்.
    Next Story
    ×